/* */

கல்லாவி அருகே பருத்தி செடியில் ஊடுபயிராக கஞ்சா பயிர்: விவசாயி கைது

ஊத்தங்கரை அடுத்த கல்லாவி அருகே பருத்தி செடியில் ஊடுபயிராக கஞ்சா வளர்த்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கல்லாவி அருகே பருத்தி செடியில் ஊடுபயிராக கஞ்சா பயிர்: விவசாயி கைது
X

கைதான விவசாயி மாதேஷ்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியகொட்டகுளம் பகுதியில் உள்ளது வைரம்பட்டி கிராமம். இங்கு பருத்திச் செடியின் நடுவே ஊடுபயிராக கஞ்சா செடி வளர்த்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் அலெக்சாண்டர் மற்றும் கல்லாவி ஆய்வாளர் பத்மாவதி நேரில் சென்று சோதனை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பொண்ணா கவுண்டர் என்பவரின் மகன் மாதேஷ் (வயது 66) பருத்திச் செடியின் நடுவே ஊடுபயிராக கஞ்சா செடி வளர்த்து வருவது தெரியவந்தது.

இதனையடுத்து, மாதேஷை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது மேலும் வளர்த்து வந்த கஞ்சா செடிகளையும் அப்புறப்படுத்தினார்கள்.

மேலும் சட்டவிரோதமாக கச்சா விற்பனை தொழிலில் ஈடுபட்டு வந்த மாதேஷ் என்பவரை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரை சிறையில் அடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 23 Nov 2021 1:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  3. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  4. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  5. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!