ஊத்தங்கரையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சைக்கிள் பேரணி

ஊத்தங்கரையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது. பேரணிக்குகாங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் ஜே எஸ் ஆறுமுகம் தலைமை வகித்தார்.மாவட்ட தலைவர் நடராஜன்.வட்டாரதலைவர் ரவிச்சந்திரன்.நகரத் தலைவர் விஜயகுமார்.
சிங்காரப்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் அகமதபாஷா.ஒப்பந்ததாரர் சின்னதம்பிஆகியோர் முன்னிலை வகித்தனர் முன்னதாக ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் தொடங்கிய சைக்கிள் பேரணி கல்லாவி சாலை , முனியப்பன் கோவில் வரை,ஊர்வலமாகச் சென்றனர் இதில் மத்தூர் வட்டாரத் தலைவர் லோகநாதன் .காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் திருமால், சொக்கலிங்கம். பூக்கடை மகி. அயோத்தி, மணி.அண்ணாதுரை .முத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu