/* */

ஊத்தங்கரை அருகே 21 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

ஊத்தங்கரை அருகே 21 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

ஊத்தங்கரை அருகே 21 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம் நிரம்பிய 600 கேன்கள்.

விழுப்புரம் மத்திய புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன் தலைமையிலான போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பெங்களூரில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற சரக்கு லாரியை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி அருகே தடுத்து நிறுத்தி, சோதனை மேற்கொண்டனர்.

அப்போது டாரஸ் லாரி முழுவதும் தனித்தனியாக பெட்டிகளில், பார்சல் செய்யப்பட்ட 35 லிட்டர் அளவு கொண்ட 600 கேன்களில், 21 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பிடிபட்டது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலேந்திரசிங்(33). என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மத்திய புலனாய்வுப் பிரிவு எஸ்.பி. சுப்புலட்சுமி நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். விசாரணைக்குப் பின் ஓசூர் கலால் பிரிவு டிஎஸ்பி சிவலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 25 Nov 2021 3:24 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    இன்று முதல் இயக்கப்படவிருந்த திருவண்ணாமலை சென்னை ரயில் திடீர் ரத்து
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  4. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  6. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  7. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  8. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  9. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  10. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!