/* */

கர்நாடகாவிற்கு கடத்த இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வழியாக கர்நாடகாவிற்கு கடத்த இருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை, வேனுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

கர்நாடகாவிற்கு கடத்த இருந்த   ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
X

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வழியாக கர்நாடகாவிற்கு கடத்த இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வழியாக கர்நாடகாவிற்கு கடத்த இருந்த ஒரு டன் ரேஷன் அரிசியை, வேனுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை போலீஸ் எஸ்.ஐ. சிவராஜ் மற்றும் போலீசார், தொட்டிநாயக்கனப்பள்ளி கூட் ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு பிக்அப்-ஐ போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால், டிரைவர் நிற்காமல் வேனை தூரமாக சென்று நிறுத்தி விட்டு அருகில் உள்ள மலைக்கு தப்பி ஓடி விட்டார்.

உடனே, போலீசார் அந்த வண்டியை சோதனை செய்த போது, அதில், 1,000 கிலோ எடை கொண்ட 20 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வேனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அந்த அரிசி தர்மபுரி மாவட்டத்தில் இருந்து கர்நாடகாவிற்கு கடத்த இருந்தது தெரியவந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

Updated On: 27 Jun 2021 6:02 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்