/* */

கெலமங்கலம் அருகே 2 டன் ரேஷன் அரிசி கடத்தல் - வாலிபர் கைது

கெலமங்கலம் அருகே, 2 டன் ரேஷன் அரிசி கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், வாலிபரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

கெலமங்கலம் அருகே  2 டன் ரேஷன் அரிசி கடத்தல் - வாலிபர் கைது
X

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடகா மாநிலத்திற்கு கடத்தப்பட்டு வருவதாக, மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, எஸ்ஐக்கள் சிவசாமி, தென்னரசு ஆகியோர் கெலங்கலம் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது, கெலமங்கலம் பகுதியில் சென்ற, ஒரு பிக்கப் வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அந்த ரேஷன் அரிசியையும், வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார், அந்த வாகனத்தை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கே.செட்டிஅள்ளி கிராமத்தை சேர்ந்த அஜீத்குமார்(27) என்பதும், அவர் ராயக்கோட்டை, நெல்லூர் பகுதிகளில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடகாவிற்கு எடுத்து சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 July 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...