/* */

தேன்கனிக்கோட்டை அருகே கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி: ஒருவா் கைது

தேன்கனிக்கோட்டை அருகே கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தேன்கனிக்கோட்டை அருகே கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி: ஒருவா் கைது
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, நேதாஜி சாலையைச் சோ்ந்தவா் சக்திவேல் (24). கூலித் தொழிலாளி. இவா் கெலமங்கலம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவா், சக்திவேலை வழிமறித்து கத்தியைக்காட்டி மிரட்டி ரூ. 2,500 ரொக்கம் மற்றும் ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசி ஆகியவற்றை பறித்து சென்றாா். அவரைப் பிடிக்க முயன்ற சக்திவேலை கத்தியால் குத்தினாா். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீஸாா் அங்கு சென்று, பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தினா். இதில் அவா், கா்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், முதுக்கரே கிராமத்தைச் சோ்ந்த ராங்கே கவுடு என்கிற சந்தோஷ் (33) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On: 15 Nov 2021 5:08 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  2. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  3. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  4. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  5. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  9. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை