/* */

ரிசர்வ் வங்கி அதிகாரி பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்: புகழேந்தி

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பு செய்த ரிசர்வ் வங்கி அதிகாரி பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என புகழேந்தி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ரிசர்வ் வங்கி அதிகாரி பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்: புகழேந்தி
X

ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி.

குடியரசு தின நாளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் அவமதிப்பு செய்த ரிசர்வ் வங்கி அதிகாரி பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ஒசூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அவமரியாதை செய்ததோடு மட்டுமில்லாமல் திமிராக பேசியதற்கும் கண்டனம் தெரிவித்தார். துறை ரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாசுக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே பிஜேபி தான் பிரதான எதிர்க்கட்சி என குருமூர்த்தி மற்றும் பிஜேபியின் முன்னணி தலைவர்கள் முன்மொழிந்ததையே நயினார் நாகேந்திரன் வழிமொழிந்து உள்ளார். எனவே நயினார் நாகேந்திரன் இவ்வாறாகவே பேச வேண்டும் என புகழேந்தி வலியுறுத்தினார்.

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவினர் சொந்த பணம் செலவு செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுத்த புகழேந்தி நிச்சயமாக ஒரு இடத்தில் கூட அதிமுக வெற்றி பெறுவது என்பது கடினம் என தெரிவித்தார்.

Updated On: 28 Jan 2022 4:31 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  2. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  4. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  5. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  6. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  7. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  8. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  9. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  10. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!