கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 62 பேருக்கு பெருந்தொற்று

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 62 பேருக்கு பெருந்தொற்று
X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று ஒரே நாளில், 62 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஒருவர் பலியானார்.

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று ஒரே நாளில், 62 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில், மொத்தமாக, 40 ஆயிரத்து,546 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட, 71 பேர் உட்பட, 39 ஆயிரத்து, 502 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது, 734 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும், ஒருவர் பலியானார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை, 310 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture