/* */

கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள்பதிவு செய்ய வேண்டும்: கலெக்டர்

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகளையும் பதிவு செய்ய வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள்பதிவு செய்ய வேண்டும்: கலெக்டர்
X

கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலை

இதுகுறித்து கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அனுமதியின்றி சாதாரண கற்கள், கிரானைட் போன்ற கனிமங்களை வெட்டி எடுத்துச் செல்வதை தடுத்து அரசுக்கு வருவாய் ஈட்டிடும் நோக்கில், தமிழக அரசால் அனுமதியின்றி கனிமங்கள் வெட்டி எடுத்துக்கொண்டு செல்வதை தடுத்தல், கனிம இருப்பு கிடங்கு மற்றும் கனிம விற்பனையாளர் விதிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாதாரண வகை கற்கள், ஜல்லி மற்றும் செயற்கை மணல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மட்டும் கனிம இருப்பு கிடங்கு அமைக்க மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று நடைபெற்று வருகின்றன.

கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகள் கனிம இருப்பு கிடங்கு அமைக்க மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது, விதிகளின்படி குற்றமாகும். னுனவே, தமிழ்நாடு கனிம இருப்பு கிடங்கு விதிகள் 2011ன் விதி 4ன்படி, கிரானைட் மெருகூட்டும் தொழிற்சாலைகளை மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பம் அளித்து உடன் பதிவு செய்திட நடவடிக்கை எடுத்திட இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. தவறும் பட்சத்தில், மாவட்ட நிர்வாகத்தால் மேற்படி தொழிற்சாலைகளின் மீது சட்டப்படியான மேல்நடவடிக்கை தொடரப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

Updated On: 20 Aug 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  2. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  3. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  4. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  5. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  9. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை