/* */

விஷவாயு தாக்கியதில் 2 தொழிலாளர்கள் பலி

விஷவாயு தாக்கியதில் 2 தொழிலாளர்கள் பலி
X

கிருஷ்ணகிரியில் பழைய தண்ணீர் தொட்டியை புதுப்பிக்கும்போது விஷவாயு தாக்கியதில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் கிருஷ்ணகிரியில் உள்ள பழைய வீடு ஒன்றை வாங்கி அதனை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று வீட்டில் உள்ள பழைய தண்ணீர் தொட்டியை புதுப்பிக்கும் பணியில் கீழ் புதூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாஜலபதி முருகன் மற்றும் சத்யசாய் நகர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி ஆகிய மூவரும் ஈடுபட்டிருந்தனர். 10 அடி அகலமும் 12 அடி உயரமும் கொண்ட இந்த தண்ணீர் தொட்டிக்குள் தொழிலாளர்கள் மூன்று பேரும் இறங்கியவுடன் ஒருவர் பின் ஒருவராக மூச்சு திணறி மயங்கி விழுந்தனர்.

இது குறித்து அங்கு இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீர் தொட்டிக்குள் மயங்கிக் கிடந்த 3 பேரையும் வெளியில் எடுத்து முதலுதவி கொடுக்கையில் தண்ணீர் தொட்டிக்குள் விஷவாயு தாக்கி மூச்சு திணறல் ஏற்பட்டதில் பெரியசாமி மற்றும் முருகன் ஆகியோர் உயிரிழந்து தெரிய வந்தது. தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்த வெங்கடாஜலபதி மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 28 Jan 2021 11:04 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  2. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  3. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  4. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  5. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  6. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  7. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  8. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  9. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  10. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?