/* */

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.5.65 லட்சம் மோசடி: இளம்பெண் கைது

கிருஷ்ணகிரியில் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.5.65 லட்சம் பெற்று போலி உத்தரவு நகல் வழங்கிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.5.65 லட்சம் மோசடி: இளம்பெண் கைது
X

மோசடியில் ஈடுபட்ட சுபலட்சுமி.

கிருஷ்ணகிரி லண்டன்பேட்டையை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சத்யா. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பொம்மண்டபள்ளி பகுதியை சேர்ந்தவர் சுபலட்சுமி. இவர் கடந்த சில வருடங்கள் முன்பு வரை கிருஷ்ணகிரி கோ ஆப்பரேடிவ் காலனியில் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் 10ம் வகுப்பு வரை ஒரே வகுப்பில் படித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த, 2 வருடங்களுக்கு முன் சத்யாவை தொடர்பு கொண்ட சுபலட்சுமி தனக்கு அரசு அதிகாரிகளிடையே நல்ல பழக்கம் இருப்பதாகவும், அவர்களிடம் பணம் கொடுத்து அரசு வேலை வாங்கலாம் என மூளைச்சலவை செய்துள்ளார். அதனை நம்பி சத்யாவும் 4 லட்சத்து, 65 ஆயிரம் ரூபாய் பணத்தை சுபலட்சுமியிடம் கொடுத்துள்ளார்.

இதேபோல, சேலம் மாவட்டம், தம்மம்பட்டியை சேர்ந்த முத்தையன் என்பவரிடமும் 1 லட்ச ரூபாய் பெற்றுள்ளார். இவர்களிடம், வேலை ஓரிரு மாதங்களில் வந்துவிடும் என கூறியுள்ளார். இதனையடுத்து, கடந்த ஜூன் 21ம் தேதி, கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் முன்பு வேலைக்கான உத்தரவு நகலை அவர் வழங்கியுள்ளார்.

இதை பெற்றுக்கொண்டு கலெக்டர் அலுவலகம் சென்ற சத்யாவுக்கு அது போலியாக தயாரிக்கப்பட்டது என தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அவர் அளித்த புகாரின்பேரில் சுபலட்சுமியை இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Updated On: 10 Sep 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது