ஓசூரில் பயங்கரம் பழ வியாபாரி கத்தியால் குத்திக் கொலை, மச்சான் வெறிச்செயல்

ஓசூரில் பயங்கரம் பழ வியாபாரி கத்தியால் குத்திக் கொலை, மச்சான் வெறிச்செயல்
X

கொலை செய்யப்பட்ட விக்கி( பைல் படம்)

ஓசூரில் குடும்ப தகராறில் பழ வியாபாரியை அவரது மச்சான் கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேர்பேட்டை நில மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாதேஷ் என்கிற மாதா ( 29). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சோனியா (25). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் சோனியா அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இது பற்றி அறிந்த சோனியாவின் அண்ணன் விக்கி (31) கணவன் & மனைவியை சமாதானப்படுத்திசேர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்காக அவர் தனது தங்கையின் கணவர் மாதேசிடம் அடிக்கடி பேசி வந்தார்.

இன்று மாலை தனது தங்கை கணவர் மாதேசிடம் சமாதானம் பேசுவதற்காக விக்கி தேர்பேட்டைக்கு வந்தார். அப்போது மாதேசிற்கும், விக்கி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாதேஷ் விக்கியை தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் விக்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

இந்த கொலை குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கொலை செய்யப்பட்ட விக்கி ஓசூரில் பாகலூர் சாலையில் டீச்சர் காலனியில் வசித்து வந்தார். அவர் ஓசூரில் ரிங்ரோட்டில் பழக்கடை நடத்தி வந்தார்.

இதையடுத்து போலீசார் விக்கியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக மாதேசை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஓசூரில் குடும்ப தகராறில், பழ வியாபாரியை, அவரது மச்சானே கத்தியால் குத்தி கொலை செய்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story