/* */

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஓசூர் அருகே மத்திகிரி பேருந்து நிலையத்தில் மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

மத்திகிரி பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர். 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மத்திகிரி பேருந்து நிலையத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள விளை நிலங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக விவசாய சங்க மாநில துணை தலைவர் இலகுமையா தலைமையில் நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில், மத்திய மாநில அரசுகள் மழையால் சேதமடைந்த விவசாய பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.

மாவட்டத்தில் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக பெய்த மழையினால் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த நெற்பயிர், ராகி, தக்காளி, அவரை, பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களில் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. அறுவடைக்கு தயராக இருந்த பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் முழ்கியதால் விவசாயிகளுக்கு லட்சகணக்கில் பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளதால் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மேலும் மழையால் நனைந்துப்போன பயிர்கள் முளைத்து உள்ளதால் விசாயிகளுக்கு இடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.

எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On: 14 Dec 2021 1:57 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  3. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  6. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  8. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  9. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  10. வீடியோ
    கலை அறிவியல் கல்லூரிகளில் அலைமோதும் கூட்டம் | இது தான் காரணமா ?TNGASA...