/* */

கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டி பஜ்ரங்தள் அமைப்பினர் விழிப்புணர்வு பேரணி

பஜ்ரங்தள் அமைப்பு சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டி ஸ்லோகங்கள் வாசித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டி பஜ்ரங்தள் அமைப்பினர் விழிப்புணர்வு பேரணி
X

பஜ்ரங்தள் அமைப்பினரின் விழிப்புணர்வு பேரணி.

ஒசூரில் பஜ்ரங்தள் அமைப்பு சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் செலுத்தி கொள்ள வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பஜ்ரங்தள் அமைப்பினர் ஸ்லோகங்கள் வாசித்தபடி ஊர்வலமாக சென்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரம் பேர் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இவர்கள் அனைவரும் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் மாவட்டத்தில் உள்ள அனைவரும் கோரோணா தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஓசூரில் இன்று பஜ்ரங்தள் அமைப்பு சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ராம்நகரில் துவங்கிய இந்த பேரணி காந்திசிலை வரை சென்று நிறைவடைந்தது. பேரணியில் சென்றவர்கள் கோஷங்கள் எழுப்பியபடி அனைவரும் கட்டாயம் அரசின் விதிமுறைகளை பின்பற்றி கொரோனா தடுப்பு ஊசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

பின்னர் காந்தி சிலை பகுதியில் பஜ்ரங்தள் அமைப்பினர் அனைவரும் கடைப்பிடிப்போம் கடைப்பிடிப்போம் அரசாங்க விதிமுறைகளை கடைபிடிப்போம் என்ற கோஷங்களை எழுப்பி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Updated On: 19 Dec 2021 1:23 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  2. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  5. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  6. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  7. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண விழா..!
  9. நத்தம்
    நத்தம் பகவதி அம்மன் திருவிழா: காப்புக்கட்டுடன் தொடங்கியது..!
  10. கோவை மாநகர்
    காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!