/* */

மதுபாட்டில் கடத்திய 6 பேர் கைது- 3 சரக்கு வேன், ஒரு கார் பறிமுதல்

ஓசூர் வழியாக கர்நாடக மாநில மதுபாட்டில்கள் கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 சரக்கு வேன்கள், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

மதுபாட்டில் கடத்திய 6 பேர் கைது-   3 சரக்கு வேன், ஒரு கார் பறிமுதல்
X

கர்நாடக மாநில மதுபாட்டில்கள் கடத்திய 6 பேர், கிருஷ்ணகிரி போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு தளர்வின் ஒருபகுதியாக, மதுக்கடைகள் காலையில் குறிப்பிட்ட நேரம் திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்குள் செல்ல கூடிய சிலர் சரக்கு வாகனங்களில், கர்நாடக மாநில மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து, தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள்.

இது குறித்து நடவடிக்கை எடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவிட்டார். அதன் பேரில் ஓசூர் மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையில் போலீசார் ஓசூர் ஜூஜூவாடி, கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி ஆகிய பகுதிகளில், வாகனச்சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், சரக்கு வாகனங்கள் மற்றும் காரில் கர்நாடக மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்ததாக, கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த மூவேந்தன், மருதுபாண்டியன், சூளகிரியை சேர்ந்த முனிராஜ், பாலக்கோட்டை சேர்ந்த அன்பரசன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 34, கர்நாடக மாநில மதுபாட்டில்கள் மற்றும் 2 சரக்கு வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் நடந்த ஆய்வில், கர்நாடக மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்த, தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி, பெங்களூருவை சேர்ந்த பால்ராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 672 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு சரக்கு வேன், ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 29 May 2021 2:57 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  4. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை
  6. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை எதிர்கொள்ள காவல்துறையினருக்கு சன் கிளாஸ்
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அரசு ஐடிஐக்களில் சேர ஜூன் 7ம் தேதிக்குள்...