Begin typing your search above and press return to search.
முதியவரை தாக்கி இருசக்கர வாகனம், மொபைல் போன் திருட்டு
கந்திகுப்பம் அருகே முதியவரை தாக்கி இரு சக்கர வாகனம் மற்றும் செல்போனை கொள்ளையடித்துச் சென்ற 3 மர்ம நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த ஒப்பதவாடி பகுதியை சேர்ந்தவர் ரத்னம் விவசாயியான இவர் தனது இருசக்கர வாகனத்தில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார் இந்தநிலையில் நேற்று மதியம் கிருஷ்ணகிரி சென்னை சாலையில் உள்ள BRG மாதேப்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றார்.
அப்போது அவரை வழிமறித்த 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க மூன்று நபர்கள் அவரை இரும்பு கம்பியால் தாக்கி அவரது இருசக்கர வாகனம் மற்றும் அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர்.
இதில் படுகாயமடைந்த ரத்னம் பர்கூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுகுறித்து கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.