/* */

சந்தன மரம் கடத்தல்: பர்கூரில் மேலும் 4 பேர் கைது

சந்தன மரம் கடத்தல் விவகாரம் தொடர்பாக, பர்கூரில் மேலும் 4 பேரை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சந்தன மரம் கடத்தல்: பர்கூரில் மேலும் 4 பேர் கைது
X

சந்தன மரக்கடத்தல் தொடர்பாக பர்கூரில் கைது செய்யப்பட்டவர்கள். 

கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டம், குப்பி வட்டாரத்தில் உள்ள வனப்பகுதியில் சந்தன மரங்களை, 15 பேர் கொண்ட கும்பல் வெட்டி கடத்துவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற வனத்துறையினர், கடத்தல் கும்பலை சுட்டு பிடித்தனர். மூன்று பேர் தவிர மற்றவர்கள் தப்பிவிட்டனர்.

கைதான மூன்று பேரும் கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி இருளர் காலனியை சேர்ந்த மூர்த்தி, மல்லப்பா, கிருஷ்ணா, என்பது தெரிந்தது. அவர்களுடன் தமிழகம் வந்த கர்நாடக போலீசார், வேப்பனஹள்ளி, பர்கூர் பகுதியில் விசாரணை நடத்தினர். கர்நாடக மாநிலம் தும்கூர் வனசரகர் துக்கப்பா, குப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் நடாப் உள்ளிட்ட குழுவினர், இன்று பர்கூர் பகுதியில் மேலும் நான்கு பேரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள், வாணியம்பாடி தேவன், திருப்பத்தூர் தினேஷ்குமார், பர்கூர், குண்டல குட்டையைச் சேர்ந்த முனியப்பன், நேரிடமானபள்ளியைச் சேர்ந்த பச்சையப்பன் என தெரிந்தது. கடத்தல் கும்பலை சேர்ந்த மேலும் சிலரை கர்நாடக போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Updated On: 10 Sep 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  4. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  5. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  6. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  7. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  8. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  9. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  10. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!