Begin typing your search above and press return to search.
பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே பணம் வைத்து சூதாடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மும்தாஜ் மற்றும் போலீசார் பர்கூரை அடுத்த பூமாலை நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகே பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த பர்கூர் துறைஸ் நகர் பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத், வெங்கடேஷ், சிவகுமார் ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 600 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.