/* */

சாலையோரம் பட்டுபோன மரங்கள்: உடனடியாக அகற்றலாமே

பர்கூர் பகுதியில், சாலையோரம் உள்ள பட்டுப்போன மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

சாலையோரம் பட்டுபோன மரங்கள்:  உடனடியாக அகற்றலாமே
X

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் சுற்றுவட்டார பகுகளில் உள்ள சாலையின் இரண்டு பக்கமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புளிய மரங்கள் உள்ளன. இவற்றை நட்டு வைத்து, 80 ஆண்டுகள் கடந்துள்ளன.

இதனால் பல மரங்கள் தண்ணீர் பற்றாக்குறையால், பட்டுப்போய் காய்ந்துள்ளன. பல சமயங்களில் இந்த பட்டுப்போன மரங்கள் பலத்த காற்றினால் வேரோடு சாய்ந்து விபத்து ஏற்படுகிறது.

கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை சாலையில் ஆனந்த நகர் அருகில் சாலையோரம் உள்ள புளியமரம் ஒன்று பட்டுப்போய் மிகவும் காய்ந்துள்ளது. இந்த மரம் கரையான் அரித்து மிகவும் பலவீனமாக உள்ளது.

தற்போது அதிக அளவில் காற்றடிப்பதாலும், அடிக்கடி சூறாவளிக் காற்று வீசுவதாலும், இந்த மரம் எந்த நேரத்திலும் சாலையில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த மரத்தையும், பட்டுப்போயுள்ள இதர மரங்களை உடனே அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 12 May 2021 1:04 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு