/* */

பர்கூர் அருகே கல்பாரம் ஏற்றிச்சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 4 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே கல்பாரம் ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

பர்கூர் அருகே கல்பாரம் ஏற்றிச்சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: 4 பேர் படுகாயம்
X

விபத்துக்குள்ளான மினி வேன்.

கிருஷ்ணகிரி பெத்ததாளப்பள்ளியில் இருந்து கருங்கற்களை ஏற்றிக் கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிக்கு இன்று வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வேன் பர்கூரை அடுத்த அத்திமரத்துப்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எதிரில் சென்று கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் அந்த வேனில் பயணம் செய்த கிருஷ்ணகிரி அடுத்த பாஞ்சாலியூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ், அருள், சீனி, பிரபு ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் அங்கு சென்று விபத்துக்குள்ளான வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 Sep 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  2. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  3. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  4. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ+ அங்கீகாரம் வழங்கியது நாக் அமைப்பு
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  6. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  7. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  8. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  9. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?