/* */

அடிமுறை தற்காப்பு கலை போட்டிகளில் குளித்தலை மாணவிகள் சாதனை

அடிமுறை தற்காப்பு கலை மாநில அளவிலான போட்டிகளில் குளித்தலை மாணவிகள் 17 பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

HIGHLIGHTS

அடிமுறை தற்காப்பு கலை போட்டிகளில் குளித்தலை மாணவிகள் சாதனை
X

அடிமுறை தற்காப்பு கலையில் மாநில அளவில் பதக்கம் வென்ற மாணவிகள்.

குளித்தலை அருகே க. பேட்டையை சேர்ந்த வீரா என்பவர் குளித்தலை பகுதியில் அடிமுறை என்ற தற்காப்பு கலையை பயிற்றுவித்து வருகிறார். தமிழர்களால் உருவாக்கப்பட்ட போர்கலை, ஒருத்தரை தாக்கவும், தற்காத்துக் கொள்ளவும், விஞ்ஞான ரீதியாக கட்டமைக்கப்பட்டது. இந்த கலை வீர விளையாட்டு அடிமுறை உலக முழுவதும் பல நாடுகளில் கராத்தே, குங்பூ, ஜூடோ, டேக்வாண்டோ உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் பரவி வருகிறது.

தமிழகத்தில் அதிகளவு பரவி வரும் நிலையில் குளித்தலை பகுதியைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் பிரீத்தா, மருக்ஷியா, சுபிக்ஷா, சஸ்மிதா, சந்தியா, காயத்ரி ஆகிய 6 மாணவிகள் வீரா சிலம்பம் மற்றும் அடிமுறை பயிற்சி கூடத்தில் இருந்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சௌடாம்பிகா இன்ஜினியரிங் கல்லூரயில் 3 வது மாநில அளவிலான நடைபெற்ற சேம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

அடிமுறை போட்டிகளான சுவடு குழு, சுவடு தனித்திறமை, கை போர் சைலாத் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு ஆறு மாணவிகளும் 9 தங்கப் பதக்கத்தையும், 3 வெள்ளி பதக்கம், 5 வெண்கல பதக்கம் வென்றுள்ளார்கள். இவர்களுக்கு குளித்தலை பகுதி மக்கள் வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டினர்.

Updated On: 19 Oct 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  4. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  6. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  8. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  9. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  10. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு