/* */

மருதூர் பேரூராட்சியில் சாலை வசதி கோரும் பொதுமக்கள்

மருதூர் பேரூராட்சியில் பணிக்கம்பட்டியில் முறையான சாலை வசதி இல்லாததால், தேங்கிய மழை்நீரில் பொதுமக்கள் சென்றுவரும் அவலம்.

HIGHLIGHTS

மருதூர் பேரூராட்சியில் சாலை வசதி கோரும் பொதுமக்கள்
X

சாலையில் தேங்கிய தண்ணீர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட பணிக்கம்பட்டி சந்தை அருகில் உள்ள 13வது வார்டு பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மக்கள் வசிக்கும் பகுதிகளில் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரவில்லை என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்துள்ளனர்,

ஆனால் இன்றுவரை யாரும் கண்டு கொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். நேற்று இரவு பெய்த மழையில் வார்டு பகுதியில் சாலைகளில் மழைநீர் அதிகளவு தேங்கி நிற்பதால் பகுதி மக்கள் மழை நீரில் நடந்து சென்று வரும் அவல நிலை உள்ளது. சாலையில் தேங்கியுள்ள மழை நீரில் தொற்றுநோய் பரவும் அச்சத்திலேயே பொதுமக்கள் நடந்து சென்று வருகின்றனர். சாலை மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 23 Oct 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    அதிபர் இறப்பில் Israel சதிவேலையா? திடுக்கிடும் அரசியல் பின்னனி |...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருவண்ணாமலை
    வாழும் போது மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்: கலெக்டர்...
  6. ஈரோடு
    சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
  7. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  8. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  10. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!