/* */

தமிழக அரசின் ஊர்தியை அனுமதிக்கக்கோரி சாமானிய மக்கள் நலக்கட்சி ஆர்ப்பாட்டம்

தமிழக அரசின் ஊர்தியை அனுமதிக்கக்கோரி சாமானிய மக்கள் நலக்கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

தமிழக அரசின் ஊர்தியை அனுமதிக்கக்கோரி சாமானிய மக்கள் நலக்கட்சி ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமானிய மக்கள் நலக்கட்சியினர்.

பெட்டவாய்த்தலை பேருந்து நிலையம் அருகே மத்திய அரசினை கண்டித்தும், குடியரசுத்தின விழாவில் தமிழக ஊர்தி புறக்கணிப்பினை கண்டித்தும் சாமானிய மக்கள் நல கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

கரூர் மாவட்டம், சாமானிய மக்கள் கட்சியின் திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாலசுப்பிரமணி தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. சாமானிய மக்கள் நல கட்சியின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, தொடர்ந்து தமிழகத்தினை மத்திய அரசு புறக்கணித்து வருவது கண்டிக்கத்தக்கது. தற்போது நடைபெற உள்ள குடியரசுத்தின விழாவில் தமிழகத்தில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர்களை மரியாதை செய்யும் வகையில் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழகத்தின் சிறப்பு ஊர்தியான டாப்ளோ ஊர்தியினை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். ஆகவே மத்திய அரசு இதனை வலியுறுத்த வேண்டுமென்றும் பேசினார்.

மேலும், இந்த ஆர்பாட்டத்தில் சாமானிய மக்கள் நல கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் சண்முகம், குளித்தலை நகர செயலாளர் தாமோதரன், திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் குமார், தொட்டியம் ஒன்றிய செயலாளர் மலர்மன்னன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதில் தமிழகத்தின் பாரம்பரிய வரலாற்றினை அழிக்கும் முயற்சியில், மத்திய அரசு செயல்படுவதாகவும், வரும் 26 ம் தேதி டெல்லி செங்கோட்டையில் பங்கேற்கும் டேப்ளோ வாகன ஊர்தியில் தமிழகத்தின் ஊர்தி திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு மாபெரும் கண்டனத்தினை சாமானிய மக்கள் நல கட்சி தெரிவிப்பதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சி முடிவில் சாமானிய மக்கள் நல கட்சியின் கரூர் நகர செயலாளர் தென்னரசு நன்றி கூறினார்.

Updated On: 20 Jan 2022 8:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது