மனநலம் பாதித்த மகனால் தாய் குத்தி கொலை

மனநலம் பாதித்த மகனால்   தாய் குத்தி கொலை

குளித்தலையில் தாயை கொலை செய்த மன நலம் பாதித்த ஆசிரியர்.

குளித்தலையில் தாயை கழுத்தை அறுத்து கொலை செய்த மனநலம் பாதித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

குளித்தலை அருகே திம்பம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கணக்கப்பிள்ளையூரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவர் வீட்டிலேயே உள்ளார். இவருக்கு திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், இன்று தன் தாய் முருகாயி விவசாய கூலி வேலைக்கு சென்றுவிட்டு வீட்டில் இருந்த பொழுது, பொன்னுசாமி கத்தியால் தனது தாயின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் படுகாயமுற்ற முருகாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த குளித்தலை காவல் நிலைய போலீசார் பொன்னுசாமியை கைது செய்தனர். மனநலம் பாதித்த மகன் தனது தாயை கொலை செய்த சம்பவம் குளித்தலையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story