மருதுார் பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூரில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூரில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட பனிக்கம்பட்டி இந்திரா காலனியில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக காவிரி குடிநீர் வழங்கவில்லை என்றும், அப்பகுதி மக்கள் அவ்வழியாக செல்லும் காவிரி குடிநீர் பைப் வழியாக செல்லும் உபரிநீரை குடிக்க பயன்படுத்தி வருவதாகவும், குடிநீர் பிரச்சனை அதிகளவில் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
அப்பகுதியில் தெருவிளக்குகள் சரிவர பராமரிக்காமலும், கழிவு நீர் வெளியே செல்லாத நிலையிலும் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி 20க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் மருதூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, போர்க்கால அடிப்படையில் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தர வலியுறுத்தி செயல் அலுவலர் கார்த்திகேயனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அவர் சில நாட்களில் நடவடிக்கை எடுத்து தருவதாக கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu