/* */

அய்யர்மலையில் கார்த்திகை தீபம்: பக்தர்கள் பரவசம்

குளித்தலை அய்யர் மலையில் 1,117 அடி உயரமுள்ள மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

HIGHLIGHTS

அய்யர்மலையில் கார்த்திகை தீபம்: பக்தர்கள் பரவசம்
X

அய்யர்மலையில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் மிகவும் பிரசித்தி பெற்ற மாணிக்கமலையான் என்கின்ற ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் மிகப்பெரிய தெப்பக்குளத்துடன் உள்ளது. இந்த கோவிலின் மலை 1,117 அடி உயரம் கொண்ட செங்குத்தான 1,017 படிகளுடன் அய்யர்மலை உச்சியில் கோவில் உள்ளது.

வருடந்தோறும் கார்த்திகை மாதம் தீபத் திருநாளை முன்னிட்டு மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும், தொடர்ந்து 150 மீட்டர் நீளமுள்ள துணியாலான நாடா திரி வைத்து 5 கேன் நெய் மற்றும் 16 கேன் தீப எண்ணை ஊற்றி சுமார் 5 அடி உயரமுள்ள டிரம்மில் வைத்து மலையின் உச்சியில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடத்தி, திரியில் குருக்கள் மகா தீபத்தை ஏற்றினார். பக்தர்கள் அனைவரும் முழக்கங்கள் எழுப்பி இறைவனை வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Nov 2021 6:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  3. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  6. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  9. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  10. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!