அரசு மருத்துவமனைக்கு முன்னாள் மாணவர்கள் உதவி
குளித்தலை அரசு மருத்துவமனையில் முன்னாள் மாணவர்கள் வழங்கிய இயந்திரத்தின் பயன்பாட்டை தொடங்கி வைக்கிறார் எம்எல்ஏ மாணிக்கம்.
குளித்தலை அரசு மருத்துவமனைக்கு குளித்தலை அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சார்பில் வழங்கப்பட்ட வெந்நீர் தயாரிக்கும் இயந்திரத்தின் பயன்பாட்டை எம்எல்ஏ மாணிக்கம் தொடங்கி வைத்தார். குளித்தலை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டும் தேவையான டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்கப்படாத நிலையில் நோயாளிகளுக்கான பிற வசதிகளும் இல்லாமல் உள்ளது.
நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1992-94 ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் தங்களுக்குள் நிதி திரட்டி 35,000 மதிப்புள்ள சுடுநீர் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை குளித்தலை அரசு மருத்துவ மனைக்கு வழங்கினர்.
குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் இரா.மாணிக்கம் முன்னாள் மாணவர்கள் வழங்கிய சுடுநீர் மற்றும். குடிநீர் சுத்திகரிக்கும் கருவியை இன்று மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், குளித்தலை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் ஸ்ரீகாந்த் மற்றும். முன்னாள் மாணவர்கள் இன்ஜினியர் முத்துகுமார், மெடிக்கல் முருகானந்தம் மற்றும் மருத்துவர்கள் பொதுமக்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu