Begin typing your search above and press return to search.
கரூரில் இன்று 23 பேர் கொரோனாவால் பாதிப்பு
கரூரில் மாவட்டத்தில் கடந்த சில தினங்களை விட இன்று கொரோனா தொற்று சற்று அதிகரித்து உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
கரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களை விட இன்று அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கரூர் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றை கண்டறியும் முகாம் நடத்தப்படுகிறது. இந்த வகையில் இன்று மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட பரிசோதனையில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த சில தினங்களாக 17 க்கும் குறைவான நிலையில் இன்று சற்று அதிகமாக 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து இன்று 17 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 188 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையிலும், வீடுகளில் தனிமைப்படுத்ததிலும் உள்ளனர்.