/* */

கரூரில் திருநங்கைகளுக்கு கொரோனா தடுப்பூசி: கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

கரூரில் திருநங்கைகளுக்கு கொரோனா தடுப்பபூசி செலுத்தும் பணி கலெக்டர் பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

கரூரில் திருநங்கைகளுக்கு கொரோனா தடுப்பூசி: கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
X

கரூரில்  திருநங்கைகளுக்கு நடைபெற்ற கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கரூரில் திருநங்கைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிரபு சங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கொரோனா வைரஸ் நோய் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டு கோவாக்சின் மற்றும் கோவிசீல்டு என்ற இருவகையான தடுப்பூசிகள் மத்திய - மாநில அரசுகள் சார்பில் செலுத்தப்பட்டு வருகிறது.

கரூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக தொடர்ச்சியாக தடுப்பூசி போடும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கரூரில் உள்ள திருநங்கைகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கரூர் சுங்ககேட் பகுதியில் அமைந்துள்ள கிராமியம் தொண்டு நிறுவனத்தில் 100 திருநங்கைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த சிறப்பு முகாமை கரூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிரபு சங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டு திருநங்கைகளை நலம் விசாரித்து, அவர்கள் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

கரூர் மாவட்டத்தில் இன்று 17 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த தடுப்பூசி மையங்களில் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டன.

Updated On: 21 Jun 2021 11:37 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  4. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  5. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  10. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு