/* */

கரூரில் ஆகஸ்ட் 21 ல் கொரோனா தடுப்பூசி செலுத்துமிடங்கள்

கரூர் முழுவதும் பல இடங்களில் கோவிஷீல்டு முதல் தவணை, கோவாக்சின் 2 வது தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது

HIGHLIGHTS

கரூரில் ஆகஸ்ட் 21 ல் கொரோனா தடுப்பூசி செலுத்துமிடங்கள்
X

கரூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 21 ம் தேதி கோவிஷீல்டு முதல் தவணை, கோவாக்சின் 2 வது தவணை தடுப்பு ஊசி செலுத்தப்படும் இடங்கள் விவரம் வருமாறு :

கரூர் நகராட்சிக்குட்பட்ட செல்லாண்டி பாளையம் துணை சுகாதார நிலையம், வெங்கமேடு திட்ட சாலை, மீனாட்சி மண்டபம், கோதூர் அரசு பள்ளி, கொளந்தானூர் தேவி ஆரம்பப்பள்ளி, கோம்புபாளையம் முத்தனூர் அரசுப்பள்ளி, திருமுக்கூடலூர் அரசு பள்ளி,

குளித்தலையில் கீழத்தாளியாம்பட்டி பஞ்சாயத்து யூனியன் இடைநிலைப்பள்ளி,

தோகைமலையில் கள்ளை மினி கிளினிக்,

கிருஷ்ணராயபுரம் இரும்பூதிபட்டி பஞ்சாயத்து அலுவலகம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி,

கடவூரில் உள்ள மாவத்தூர் ரெட்டிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி,

உப்பிடமங்கலம் அருகிலுள்ள கருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி, புலியூர் வெள்ளாளப்பட்டி அரசு இடைநிலைப்பள்ளி, பள்ளப்பட்டி உருசு இடைநிலைப்பள்ளி, கா பரமத்தி அணைப்பாளையம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி, புன்னம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இதேபோல, கோவாக்சின் 2 வது தவணை தடுப்பூசி கரூர் நகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் குளித்தலை நகராட்சி உள்ள குளித்தலை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது.

Updated On: 20 Aug 2021 4:35 PM GMT

Related News