/* */

கரூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து மாட்டு வண்டியுடன் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கரூரில் சிபிஎம், சிபிஐ, மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் இருசக்கர வாகனத்தை மாட்டு வண்டியில் வைத்து ஊர்வலமாக வந்து கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

கரூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து மாட்டு வண்டியுடன் போராட்டம்
X

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கரூரில் மாட்டு வண்டியுடன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

கரூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் சிபிஐ, சிபிஎம், சிபிஎம்எல் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் நடெபெற்ற ஆர்பாட்டத்துக்கு சிபிஐ மாவட்ட பொருளாளர் நேதாஜி தலைமையில் வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இருசக்கர வாகனத்தை மாட்டு வண்டியில் வைத்து ஊர்வலமாக வந்து கலந்து கொண்டனர். ஆர்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் இருசக்கர வாகனத்தை மாட்டு வண்டியில் வைத்து ஊர்வலம் வந்தபோது, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்போது போலீசார் மாட்டு வண்டியை அப்புறப்படுத்த கூறியபோது, போலீசாருக்கும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 29 Jun 2021 6:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  3. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  4. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  5. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  8. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  10. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி