/* */

கரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு திமுக வேட்பாளர் வெற்றி

கரூர் மாவட்ட ஊராட்சி 8 வது வார்டு உறுப்பினர் தேர்தலில் திமுக வேட்பாளர் கண்ணையன் வெற்றி பெற்றார்.

HIGHLIGHTS

கரூர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு  திமுக வேட்பாளர் வெற்றி
X

வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கண்ணையனுக்கு சான்றிதழை வழங்குகிறார் தேர்தல் நடத்தும் அலுவலர்.

கரூர் மாவட்ட ஊராட்சி வார்டு 8 க்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் கண்ணையனும், அதிமுக சார்பில் முத்துக்குமார் உட்பட 16 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களில் திமுக, அதிமுக இடையே கடும் மோதல், வாக்குவாதம், கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

திட்டமிட்டபடி ஊராட்சி வரிசையாக வாக்கு எண்ணாமல் மாற்றி எண்ணுவதாக அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து திமுக, அதிமுக இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பும் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால், சுமார் 2 மணி நேரம் தாமதமாக வாக்கு எண்ணிக்கை காலை 10 மணிக்கு தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல், முதல் சுற்றில் இருந்தே திமுக வேட்பாளர் கண்ணையன் முன்னணியில் இருந்தார். தொடர்ந்து 11 சுற்றுகளிலும் திமுக வேட்பாளர் அதிமுக வேட்பாளரை விட முன்னணியில் வாக்குகளை பெற்று வந்தார். 11 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், திமுக வேட்பாளர் கண்ணையன் 18,262 வாக்குகள் பெற்றார் அதிமுக வேட்பாளர் முத்துக்குமார் 6,573 வாக்குகள் பெற்றார். இதையடுத்து திமுக வேட்பாளர் கண்ணன் 12,191 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

Updated On: 12 Oct 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    உ.பி.யில் பா.ஜ.விற்கு ஏற்பட்ட தோல்விக்கு காரணம் மோடியா? யோகியா?
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் மரக்கன்று நடும்பணி..!
  3. அரசியல்
    அயோத்தி ராமர் வழங்கிய ஆசியால் உ.பி.யில் தப்பி பிழைத்த பாரதிய ஜனதா
  4. அரசியல்
    மிரட்டிய கர்நாடகம், மிரட்ட போகும் ஆந்திரா: என்ன செய்ய போகிறார்...
  5. தொழில்நுட்பம்
    காதுகேளாத குழந்தை இருக்குதா..? கவலைப்படாதீங்க..! விரைவில் நல்லசேதி...
  6. அரசியல்
    என்டிஏ கூட்டணி தலைவராக மோடி தேர்வு: 3வது முறையாக பிரதமராவது
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் நடந்த உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வில் நடப்பட்ட...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    உலக சுற்றுச்சூழல் தின விழாவில் விளையாட்டு வீரர்களுக்கு பழ
  9. அரசியல்
    இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த மம்தா
  10. காஞ்சிபுரம்
    தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் குறித்து அவதூறு பரப்பிய காஞ்சி...