/* */

5 மாநிலத் தேர்தல் முடிவு: கரூரில் பாஜகவினர் கொண்டாட்டம்

வட மாநிலத் தேர்தல் வெற்றியை கரூர் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

HIGHLIGHTS

5 மாநிலத் தேர்தல் முடிவு: கரூரில் பாஜகவினர் கொண்டாட்டம்
X

கரூரில் பட்டாசு வெடித்து கொண்டாடிய பாஜகவினர். 

உத்தரப்பிரதேசம் உள்பட 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இந்த வெற்றியை, கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கொண்டாடினர். பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே, வெடி வைத்தும் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

ஆரவாரத்தோடு இருந்த பாஜகவினரின் மகிழ்ச்சி ஏராளமான மக்களின் கவனத்தில் ஈர்க்க வைத்தது. கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சியில், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டு மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்றும், ஜெய் ஜெய் பிஜேபி, ஜெயித்தது பார் பிஜேபி என்றெல்லாம் முழக்கங்களிட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Updated On: 11 March 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’