அதிவேகத்தில் இருசக்கர வாகனம் இயக்கம், 26 வயதில் பலியான இளைஞர்
குமரியில் அதிவேகத்தில் டூவீலரில் சென்ற இளைஞர், சுவரில் மோதி பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளை மூவாட்டுகோணம் சாலையில் வாலிபர் ஒருவர் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்ததோடு முன்னே சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் எதிரில் இருந்த பெட்ரோல் பம்பின் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.
இருசக்கர வாகனம் மோதிய வேகத்தில் வாகனத்தில் இருந்த வாலிபர் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த பளுகல் போலீசார் இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து நடந்த இடத்தில் இருந்த பெட்ரோல் பம்பில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த விபத்து குறித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.செய