/* */

ஓமிக்ரான் வைரஸ் எதிராெலி: குமரி எல்லையில் சோதனையை தீவிரப்படுத்த கோரிக்கை

ஓமிக்கிரான் அச்சம் ஏற்பட்டு உள்ள நிலையில் குமரியில் உள்ள சோதனைச் சாவடியில் சோதனையை தீவிரப்படுத்த கோரிக்கை.

HIGHLIGHTS

ஓமிக்ரான் வைரஸ் எதிராெலி: குமரி எல்லையில் சோதனையை தீவிரப்படுத்த கோரிக்கை
X

களியக்காவிளை சாேதனை சாவடி.

கேரளா மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்படாத நிலையில் தற்போது ஓமிக்ரான் பாதிப்பும், பறவை காய்ச்சலும் கேரளா மாநிலத்தை மிரட்டி வருகிறது.

அதன்படி கேரளாவில் தற்போது 60 க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க நோய் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள கேரளாவிற்கு பேருந்து போக்குவரத்தை தொடங்க அனுமதி அளித்துள்ள தமிழக அரசு தமிழக கேரளா எல்லை சோதனை சாவடிகளில் சோதனையை நிறுத்தியது.

இதனிடையே கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஒற்றை இலக்க எண்ணில் இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

இதனிடையே தமிழக கேரளா எல்லையான களியக்காவிளை உள்ளிட்ட 13 சோதனை சாவடிகளிலும் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் சுகாதார துறை, காவல்துறை, வருவாய் துறை உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கிய அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்து 24 மணி நேர சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்.

குறைந்த பட்சம் வெப்பமானி கொண்டு சோதனை செய்து சந்தேகம் இருக்கும் நபர்களுக்கு சளிப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் அது போன்று செய்தால் மட்டுமே கன்னியாகுமரி மாவட்டத்தில் நோய்த்தொற்று பரவலை தடுக்க முடியும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Updated On: 28 Dec 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  4. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  5. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  6. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?
  7. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  9. செங்கம்
    செங்கத்தில் லாரி ஓட்டுநர் அடித்து கொலை
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்