கேரளா பெண் கொலை வழக்கு: பல வழக்குகளில் தொர்புடைய குற்றவாளி சிக்கினான்
![கேரளா பெண் கொலை வழக்கு: பல வழக்குகளில் தொர்புடைய குற்றவாளி சிக்கினான் கேரளா பெண் கொலை வழக்கு: பல வழக்குகளில் தொர்புடைய குற்றவாளி சிக்கினான்](https://www.nativenews.in/h-upload/2022/02/16/1478737-videocapture20220214-231558.webp)
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அம்பலமுக்கு பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு செடிக்கடையில் வேலை பார்த்து வந்தவர் வினிதா (38). இவர் கடந்த ஞாற்றுக்கிழமை கடையின் ஒரு பகுதியில் கத்தியால் குத்தி படுகொலை செய்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த அம்பலமுக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர், இந்த விசாரணையில் பெட்டிக்கடை அருகில் உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொலையை செய்தவர் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வெள்ளமடம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்ற ராஜேஷ் (49) என்பது தெரிய வந்தது. இந்நிலையில் அவரை கேரள போலீசார் நேற்று காவல் கிணறு பகுதியில் வைத்து கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து ராஜேந்திரனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ராஜேந்திரன் கூறும் போது ஞாற்றுக்கிழமை முழு ஊரடங்கு நேர்த்தில் அம்பலமுக்கு பகுதி வழியாக சென்ற இன்னொரு பெண்ணின் கழுத்தில் இருந்து நகையை பறிக்க முயன்றபோது தோல்வி அடைந்துள்ளார்.
அப்போது இவர் இந்த செடிக்கடையில் தனிமையாக இந்த பெண் இருப்பதை பார்த்து அங்கு செடி தொட்டி வாங்குவதாக கூறி புகுந்து அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த நகையை பறித்தபோது அந்த பெண் தடுத்துள்ளார். அப்போது கையில் வைத்திருந்த கத்தியால் அவரை குத்தி படுகொலை செய்துவிட்டு பேரூர்க்கடை பகுதியில் அவர் வாடகைக்கு எடுத்திருந்த ரூம்க்கு சென்று அங்கிருந்து குமரிக்கு தப்பி வந்ததோடு நான்கு பவன் நகையை அஞ்சுகிராமம் பேருந்து நிலையம் முன்புள்ள நகை அடைமானம் வைக்கும் கடையில் அடகு வைத்துள்ளார்.
தொடர்ந்து காவல்க்கிணறு பகுதியில் சென்று தலைமறைவாக இருந்ததாகவும் கூறியதுடன், இவர் 2014-ம் ஆண்டு ஆரல்வாய் மொழி பகுதியை சேர்ந்த கஸ்டம்ஸ் அதிகாரி மற்றும் அவரது மனைவியை கொலை செய்து நகை திருடிய வழக்கு உட்பட நான்கு கொலை வழக்குகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல கொலை முயற்ச்சி வழக்குகளும் உள்ளதாக தெரியவந்தது. இந்த நிலையில் இன்று அவரை அஞ்சுக்கிராமம் நகை அடகு வைக்கும் கடைக்கு கொண்டு வந்த கேரளா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu