/* */

குமரியில் வெளுத்து வாங்கிய மழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

கன்னியாகுமரியில் வெளுத்து வாங்கிய கனமழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

குமரியில் வெளுத்து வாங்கிய மழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி
X

குமரியில் பெய்த கனமழையால், சாலையில் தேங்கியுள்ள மழைநீர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக கடும் வெயில் பொதுமக்களையும் வாகன ஓட்டிகளையும் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் நாகர்கோவில், தக்கலை, ஆரல்வாய்மொழி உட்பட மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் மழையால், வெப்பம் முழுமையாக தணிந்து குளிர்ச்சியான நிலை நிலவி வருகிறது.

மேலும் மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும் பரவலாக மழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1, சிற்றாறு 2, முக்கடல் அணை உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம், தற்போது 44.79 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 969 கன அடியாக உள்ளது, இதேபோன்று 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 63 அடியாக உள்ளது இங்கு வினாடிக்கு 455 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

தற்போது பெய்து வரும் மழையால் குடிநீர் தேவை நிவர்த்தி ஆவதோடு விவசாய தேவைகளும் நிறைவேறும் என்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 16 Sep 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  3. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  4. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  5. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  6. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
  7. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  8. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  9. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  10. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...