/* */

அதிகரிக்கும் கொரோனா: மலையோர பகுதிகளில் சேவை செய்யும் சேவா பாரதி

மலையோர பகுதிகளில் கொரோனா அதிகரிக்கும் நிலையில் மக்களுக்கு உதவ இலவச ஆம்புலன்ஸ் சேவையை சேவா பாரதி தொடங்கியது.

HIGHLIGHTS

அதிகரிக்கும் கொரோனா: மலையோர பகுதிகளில் சேவை செய்யும் சேவா பாரதி
X

கன்னியாகுமரி மாவட்ட மேற்க்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களான பேச்சிபாறை , குற்றியாறு, கோதையாறு போன்ற ஆதிவாசி பழங்குடியின மலையோர கிராமங்களில் நாளுக்கு நாள் கொரானா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

நேற்றுவரை மலையோர பகுதியில் 74 ஆதிவாசி மக்கள் கொரோனாவால் பாதிக்கபட்டு உள்ளனர், இந்த பகுதிகளில் வாகன வசதிகள் இல்லாத காரணத்தால் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும் இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்யவும் முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில் ஆதிவாசி மக்களுக்கு உதவும் வகையில் அருமனை மண்டல சேவா பாரதி அமைப்பு சார்பில் கொரோனா நோயால் இறந்தவர்கள் உடல்களை எடுத்து செல்லவும் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வரவும் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்த முற்றிலும் இலவச ஆம்புலன்ஸ் சேவையை தக்கலை சரக டி.எஸ்.பி ராமசந்திரன் தொடங்கி வைத்தார், அதன்படி இந்த ஆம்புலன்ஸ் ஆதிவாசி கிராம பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு சேவை மேற்கொள்ளப்பட உள்ளது.

Updated On: 5 Jun 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  3. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  4. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  5. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  7. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  8. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  9. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’