/* */

குமரியில் டேங்கர் லாரி மோதி பெண் காவலர் உயிரிழப்பு

குமரியில் வாட்டர் டேங்கர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் காவலர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

குமரியில் டேங்கர் லாரி மோதி பெண் காவலர் உயிரிழப்பு
X

விபத்தில் பலியான பெண் காவலர் கிறிஸ்டல் பாய்.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கிராத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டல் பாய். இவர் கருங்கல் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இதனிடையே நேற்று இரவு காவல் பணியை முடித்து அதிகாரியின் உத்தரவின் பேரில் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சென்று ஊண்டு சான்றிதழ் வாங்கி வருவதற்காக இன்று காலை கருங்கல்லில் இருந்து நட்டாலம் வழியாக மார்த்தாண்டம் வந்து கொண்டிருந்தார். அப்போது மார்த்தாண்டம் மேம்பாலத்தில் வைத்து தண்ணீர் ஏற்றி கொண்டு அதி வேகமாக வந்த டேங்கர் லாரி பெண் காவலர் ஓட்டி வந்த இருச்சக்கர வாகனம் மீது மோதியது.

இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட பெண் காவலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த மார்த்தாண்டம் போலீசார் பெண் காவலரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி ஓட்டுனரை கைது செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 12 April 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  2. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  3. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  4. வீடியோ
    சென்னையில் தென்பட்ட NASA SpaceStation ! #nasa #space #spacestation...
  5. திருவண்ணாமலை
    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருவண்ணாமலை மாவட்டம் 36 வது இடம்
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  8. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  9. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  10. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா