/* */

பதறவைத்த தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்த சிசிடிவி காட்சிகள்

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகின.

HIGHLIGHTS

பதறவைத்த தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் படகு கவிழ்ந்த சிசிடிவி காட்சிகள்
X

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை வேளையில் கரை திரும்பி தேங்காய்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் நுழைய முயலும் போது முகத்துவார பகுதியில் குவிந்து கிடந்த மணல் மேட்டில் சிக்கி படகு கவிழ்ந்தது.

இதில் 6 மீனவர்கள் காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், இனையம்புத்தன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த ஆண்டனி பிரிட்டின் என்ற மீனவர் மட்டும், படகின் அடிப்பகுதியில் சிக்கி நீந்தி வர முடியாமல் உயிரிழந்தார்.

இதனையடுத்து, சக மீனவர்கள் உயிரிழந்த மீனவரை உடலை மீட்டு கரை கொண்டு வந்து, குளச்சல் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்று பரிசோதித்தனர். அதில் அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த விபத்து குறித்த சிசிடிவிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் இரண்டு படகுகள் கரை திரும்பி வந்து கொண்டிருக்கின்றன. ஒரு படகு மட்டும் அலையில் சிக்கி கடலுக்குள் கவிழ்ந்தது மற்றொன்று அதிர்ஷ்டவசமாக தப்பி வந்தது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்பவர் நெஞ்சை பதற வைத்துள்ளது.

Updated On: 20 July 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு