/* */

மண்எடுக்க அனுமதியின்றி வாழ்வாதாரம் இல்லையே: மண்பாண்ட தொழிலாளர் வேதனை

குமரியில், மண் எடுக்க அரசு அனுமதி வழங்காததால், வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

HIGHLIGHTS

மண்எடுக்க அனுமதியின்றி வாழ்வாதாரம் இல்லையே: மண்பாண்ட தொழிலாளர் வேதனை
X

நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, இன்று  மனு அளிக்க வந்த மண்பாண்ட தொழிலாளர்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவில், சுங்கான்கடை உள்ளிட்ட 24 ஊர்களில் சுமார் 8 ஆயிரம் குடும்பங்கள் மண்பாண்ட தொழிலை நம்பி மட்டுமே வாழ்க்கை நடத்தி வருகின்றனர். மண்பாண்ட தொழிலாளர்களுக்கு தேவையான மணல் எடுப்பதற்கு அரசு அனுமதி அளிக்கப்படவில்லை.

கடந்த 2 மாதங்களில் மண் எடுக்க அனுமதி கேட்டு மண்பாண்ட தொழிலாளர்கள் 10 முறைக்கும் மேலாக, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து காத்திருந்த அவர்களை, அதிகாரிகள் அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மண்பாண்ட தொழிலாளர்கள் , வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் தங்கள் தங்களுக்கு மண் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை என்றால், ரேஷன் கார்டுகளை அரசிடம் ஒப்படைப்போம் என தெரிவித்தனர்.

தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை நம்பியே வாழ்ந்து வரும் தாங்கள், இப்போதே மண்பாண்டம் செய்யும் பணியை தொடங்கினால்தான் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலையில், அமைச்சர் வரை சந்தித்து தங்கள் நிலையை எடுத்துரைத்த பின்னரும், அரசு மண் எடுக்க அனுமதி தரவில்லை என்றனர்.

Updated On: 24 Sep 2021 6:58 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  2. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  5. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  7. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  9. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  10. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...