/* */

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஆம்புலன்ஸ் சேவை : அமைச்சர் தொடங்கி வைத்தார்

குமரியில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஆம்புலன்ஸ் சேவை : அமைச்சர் தொடங்கி வைத்தார்
X

ஷீரடி ஸ்ரீ சாயிபாபா குமரி தொண்டு நிறுவனம் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கிவைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து தற்போது படிப்படியாக குறைந்து இன்றைய நிலவரப்படி 210 நபர்கள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளவும், நோயாளிகளை அழைத்து வரவும், வீட்டிற்கு அழைத்து செல்லவும் தடுப்பூசி முகாம் பயன்பாடுகளுக்காகவும் அரசு ஆம்புலன்ஸ் வசதி போதுமானதாக இல்லை.

இந்த அசாதாரண சூழ்நிலையில் அரசிற்கு கைகொடுக்கும் விதமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் ஆம்புலன்ஸ் சேவையை அளித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இரணியல் பகுதியில் இயங்கும் ஷீரடி ஸ்ரீ சாயிபாபா குமரி தொண்டு நிறுவனம் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.

அரசுடன் கைகோர்த்து செயல்பட உள்ள இந்த ஆம்புலன்ஸ் சேவையை தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

Updated On: 16 July 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...