/* */

குமரியில் வெடி மருந்து வெடித்ததில் 15 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்: 15 பேர் காயம்

குமரியில் வெடி மருந்து வெடித்ததில் 15 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்ததோடு சிறுமிகள் உட்பட 15 பேர் காயம்

HIGHLIGHTS

குமரியில் வெடி மருந்து வெடித்ததில் 15 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்:  15 பேர் காயம்
X

கன்னியாகுமரி மாவட்டம், தர்மபுரம் பகுதியில் வெடி வெடித்ததால் சேதமடைந்த வீடு

கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தாமொழி அருகே தர்மபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், இன்று இரவு இவரது வீட்டின் பின்புறம் இருந்து பயங்கர சப்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் அக்கம் பக்கத்தில் உள்ள 15 க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த கதவுகள், ஜன்னல்கள், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் உடைந்து சிதறியது. மேலும் மூன்று மரங்கள் உடைந்து விழுந்தது, அருகில் உள்ள வீடுகளில் இருந்த சிறுமிகள் உட்பட 15 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இச்சம்பவம் குறித்து அறியாத பொதுமக்கள் நிலநடுக்கம் ஏற்பட்டு விட்டதோ என்ற அச்சத்துடன் வீட்டை விட்டு அலறி அடித்து வெளியேறினார்கள்.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்க்கு வந்த ஈத்தாமொழி போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ராஜேந்திரன் தனது வீட்டின் பின்புறம் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிப்பதற்காக வெடிமருந்து பொருட்களை வாங்கி பதுக்கி வைத்து இருந்துள்ளார்.

இந்த வெடி மருந்துகள் எதிர்பாராத விதமாக வெடித்து விபத்து ஏற்பட்டதும் தெரிய வந்தது, இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீஸார் ராஜேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 15 ஆம் தேதி ஆறுதெங்கன் விளை பகுதியில் அனுமதி இன்றி பட்டாசு தயாரிக்க வைக்கப்பட்டு இருந்த வெடிபொருள் வெடித்த விபத்தில் 10 வயது சிறுமி ஒருவர் பலியான நிலையில் தற்போது மீண்டும் வெடி விபத்து நடந்து இருப்பது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 20 March 2022 2:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  9. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!