/* */

லாரியை நிறுத்தி கதவை திறந்த ஓட்டுநர் மின்சாரம் தாக்கி பலி

குமரியில். லாரியை நிறுத்திவிட்டு கதவை திறந்த ஓட்டுநர், மின்சாரம் தாக்கி பலியானார்.

HIGHLIGHTS

லாரியை நிறுத்தி கதவை திறந்த ஓட்டுநர் மின்சாரம் தாக்கி பலி
X

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி மேலவிலாங்கோடு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் ( 46 ), தனியார் பார்சல் சர்விஸ் நிறுவனத்தில் லாரி ஒட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், நாகர்கோவில் ஸ்காட் கிருஸ்தவ மேல்நிலை பள்ளி சாலை ஓரம் உள்ள கடையில், பார்சல் இறகுவதற்காக கண்டயினர் லாரியை நிறுத்திவிட்டு கதவை திறந்தார். அப்போது அருகில் இருந்த மின்மாற்றியில் கதவு உரசியதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், லாரி ஓட்டுநர் துடிதுடித்து மயங்கி விழுந்தார்.

பொதுமக்கள், மின்சாரவாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்த நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின் பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 29 Sep 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்