Begin typing your search above and press return to search.
பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்ற மாவட்ட ஆட்சியர்
குமரியில், பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களை மாவட்ட ஆட்சியர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.
HIGHLIGHTS
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று தொடங்கப்பட்டன. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்திலும் பொறியியல் கல்லூரிகளில், முதலாம் ஆண்டு கல்வி வகுப்புகள் இன்று தொடங்கின.
நாகர்கோவிலில் உள்ள, அரசு பொறியியல் கல்லூரிக்கு வந்த முதலாமாண்டு மாணவர்களை, குமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அரவிந்த் பூச்செண்டு வழங்கி வாழ்த்துக்கள் கூறி வரவேற்றார். மேலும் பொறியியல் கல்வியை நன்கு கற்று சிறந்து விளங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதில் கல்லூரி நிர்வாகிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.