/* */

"எங்க ஊர்ல குளத்தை காணோம்" : குமரியில் விவசாயி புகாரால் அதிர்ச்சி

ஐயா எங்க ஊர்ல குளத்தை காணல என குமரியில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயியின் புகாரால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

HIGHLIGHTS

எங்க ஊர்ல குளத்தை காணோம் : குமரியில் விவசாயி புகாரால் அதிர்ச்சி
X

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாதம் தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ளும் இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து விவசாயிகள் கலந்து கொள்ளும் நிலையில் கூட்டத்தின் போது சுவாரஸ்யமான சம்பவங்களும், வாதங்களும் சில நேரங்களில் விவாதங்களும் நடைபெறும்.

இதனை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. வீடு மற்றும் கடைகளில் உள்ள பொருட்களை காணவில்லை சாலையோரம் நிறுத்தி சென்ற வாகனங்களை காணவில்லை என பல புகார்கள் வருவது வழக்கம். ஆனால் விவசாயிகள் கூட்டத்தில் ஒரே ஊரில் நான்கு பாசன குளங்களை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டது.

குளம் இருந்தால்தான் பாசனம் நடைபெறும் என்ற நிலையில் இந்த புகார் வலுவான பிரச்சனையாக எடுத்து கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டது. இதனிடையே காமெடியாக தொடங்கிய குளத்தை காணவில்லை என்ற பிரச்சனை சிறிது நேரத்திலேயே சீரியஸாக சென்றதால் கூட்டத்திற்கு வந்து இருந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Updated On: 22 April 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  5. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  6. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  9. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  10. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...