/* */

சிசிடிவி மூலம் சுய பாதுகாப்பை உறுதி செய்த பொதுமக்கள்.

நாகர்கோவிலில் சிசிடிவி கேமரா அமைத்து அதன் மூலம் தங்கள் சுய பாதுகாப்பை பொதுமக்கள் உறுதி செய்தனர்.

HIGHLIGHTS

சிசிடிவி மூலம் சுய பாதுகாப்பை உறுதி செய்த பொதுமக்கள்.
X

நாகர்கோயில் வாகையடி தெருவில் உள்ள வீடு ஒன்றில் கண்காணிப்பு கேமிரா பொறுத்தப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக விரோதிகள், சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் கஞ்சா வியாபாரிகள், கள்ள மது விற்பணை செய்பவர்கள் என சமூகத்தை அச்சுறுத்தி வரும் குற்றவாளிகள் அதிகரித்து வரும் நிலையில் இவர்களை தடுக்க காவல்துறையினர் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்திற்கு அருகே அமைந்துள்ள வாகையடி தெரு பகுதியில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும் கஞ்சா விற்பனை மூலம் அதிக பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் இதனால் தங்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு கோரிக்கை வைத்தார்கள். இதனை தொடர்ந்து அப்பகுதிகளை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சிலரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி பணம் திரட்டி அப்பகுதி முழுவதும் கண்காணிப்பு காமிராக்களை பொருத்தினார்கள். இதனை நாகர்கோயில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நவீன் தொடங்கி வைத்ததோடு அப்பகுதி மக்களையும் வெகுவாக பாரட்டினார். மேலும் இதை போல் நாகர்கோவிலில் அனைத்து பகுதி மக்களும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Updated On: 1 July 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு