/* */

உரக்கிடங்கு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி மேயர்

நாகர்கோவிலில் உள்ள உரக்கிடங்கு, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி மேயர்

HIGHLIGHTS

உரக்கிடங்கு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி மேயர்
X

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி பகுதியின் மத்தியில் அமைந்துள்ளது வலம்புரிவிளை உரக் கிடங்கை மேயர் மகேஷ் ஆய்வு செய்தார்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி பகுதியின் மத்தியில் அமைந்துள்ளது வலம்புரிவிளை உரக் கிடங்கை மேயர் மகேஷ் ஆய்வு செய்தார்.

பள்ளி கல்லூரிகள் காணப்படும் இந்த பகுதியில் அமைந்துள்ள உர கிடங்கால் நோய் தொற்று பரவுவதாகவும், பல நேரங்களில் இந்த உர கிடங்கில் ஏற்படும் தீ விபத்தால் கரும் புகை உருவாக்கி பலருக்கும் சுவாசப்பிரச்னை ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இதனிடையே உரக்கிடங்கு மற்றும் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் குமரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் விஜயசந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.அப்போது உரக்கிடங்கை மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது, உர கிடங்கில் தற்போது இருக்கும் குப்பைகளை உரமாக மாற்ற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

Updated On: 12 March 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  7. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை
  8. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  9. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  10. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த