ஆர்.எஸ்.எஸ் தலைவர் வருகை: குமரியில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ஆர்.எஸ்.எஸ் தலைவர் வருகை: குமரியில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
X
குமரிக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுத்தப்பட்டு உள்ளது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய தலைவர் வருகையை முன்னிட்டு குமரிமாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் விவேகானந்த கேந்திர நிர்வாகத்தின் தேசிய செயற்குழு கூட்டம் வருகின்ற 27 மற்றும் 28 -ஆம் தேதிகளில், குமரி விவேகானந்தா கேந்திரத்தில் நடைபெறுகிறது . இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத் வருகின்ற 26 -ஆம் தேதி இரவு கன்னியாகுமரி வருகின்றார். அவருக்கு கேந்திர நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது,

இதை தொடர்ந்து 28 -ஆம் தேதி அவர் திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய தலைவர் வருகையை முன்னிட்டு, குமரி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி