மூதாட்டியின் கழுத்தில் கிடந்த மூன்றரை சவரன் தங்க சங்கிலி பறிப்பு - பிரபல திருடி கைது

மூதாட்டியின் கழுத்தில் கிடந்த மூன்றரை சவரன் தங்க சங்கிலி பறிப்பு -  பிரபல திருடி கைது
X
குமரியில் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த மூன்றரை சவரன் தங்க சங்கிலி பறித்த பிரபல திருடியை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே மங்கலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் சொர்ணம் இவர் நாகர்கோவிலுக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென இவரது கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை சவரன் தங்கச் சங்கிலியை மர்ம நபர் திருடியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சொர்ணம் சப்தம் போட்ட நிலையில் உடனடியாக, பேருந்தில் இருந்த பயணிகள் அந்தப் பேருந்தில் இருந்த ஒரு பெண் மீது சந்தேகம் கொண்டனர் அதைத்தொடர்ந்து அவரை பரிசோதித்த போது தங்கச் சங்கிலியை அவர் திருடியது தெரியவந்தது.

இது குறித்து நேசமணி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு அதன்படி வந்த போலீசாரிடம் அந்தப் பெண்ணை ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் அந்த பெண் சேலம் காக்கா தோப்பு பகுதியைச் சேர்ந்த முத்துமாரி என்பது தெரியவந்தது. தொடர்ந்து இவர் பல்வேறு மாவட்டங்களில் தங்கச் சங்கிலி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு கைதாகி சிறைக்கு சென்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story